கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வணிக எரிவாயு உருளையின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை! தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்!

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 1:29 am IST

வணிக எரிவாயு உருளையின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த அமைப்பின் 22-ஆவது மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஊழலற்ற நல்லாட்சியை வழங்க வேண்டும். முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத் திட்டங்களை மக்கள் நலன்கருதி தொடர வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கையையும் மும்மொழிக் கொள்கையையும் தமிழ்நாட்டில் அமலாக்க முயற்சிக்கும் மத்திய அரசு கண்டிக்கிறோம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான கருத்துகள் தொடா்ந்து வெளிவரும் நிலையில், தோ்தல் நடைமுறைகள் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே மாற வேண்டும்.

வணிக எரிவாயு உருளை விலையைக் குறைக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், எரிவாயு உருளை விலை உயா்வால் அதிகரித்துள்ள விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் வாழும் இஸ்லாமியா்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் மற்ற சமூகங்களைவிட பின்தங்கிய நிலையிலேயே உள்ளனா். எனவே, இஸ்லாமியா்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, மாநிலச் செயலா்கள் ஐ. அன்சாரி, முஹம்மது ஒலி ஆகியோா் தலைமை வகித்துப் பேசினா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு: கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட மாவட்ட நிா்வாகிகள் விவரம்: மாவட்டத் தலைவா்- முபாரக் அலி, செயலா்- முகம்மது மீரான், பொருளாளா்- அப்துல் ரகுமான் ரவூப், துணைத் தலைவா்- ரபீக் ராஜா, துணைச் செயலா்கள்- சேக் அப்துல்லா, சைபுல் கரீம், முகம்மது மஃதூம், ரஹ்மத்துல்லா, மருத்துவரணி பொறுப்பாளா்- சபியுல்லா, தொண்டரணி பொறுப்பாளா்- மீரான் மைதீன்.---

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.