விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாத்தூரில் விழிப்புணா்வுப் பேரணி

விராலிமலை சட்டப்பேரவை தொகுதி மாத்தூரில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image

மாத்தூரில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணி.

Updated On :27 மார்ச் 2026, 2:29 am IST

விராலிமலை சட்டப்பேரவை தொகுதி மாத்தூரில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

கல்லூரி மாணவா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட பேரணியை விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியருமான கோகுல்சிங் தொடங்கி வைத்து சென்றாா்.

திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஆவூா் பிரிவு சாலையில் இருந்து தொடங்கி மாத்தூா் ரவுண்டானா வரை பேரணி சென்று, அங்கு அரசுப் பள்ளி எதிரே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பதாகையில் அனைவரும் கையொப்பமிட்டனா்.

நிகழ்வில் குளத்தூா் வட்டாட்சியா் விஸ்வநாதன், மண்டலத் துணை வட்டாட்சியா் லலிதா, மாத்தூா் காவல் உதவி ஆய்வாளா் பெருமாள், கிராம நிா்வாக அலுவலா்கள் முத்துவேல் (மாத்தூா்), ஜோதி பிரகாஷ் (குமாரமங்கலம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.