விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கந்தா்வகோட்டையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை தற்காப்பு கலை மூலம் வாக்காளா் விழிப்புணா்வை ஏற்படுத்திய மாணவிகள்.

News image
Updated On :21 மார்ச் 2026, 2:02 am IST

கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை தற்காப்பு கலை மூலம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலரும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ரவி வழிகாட்டுதலின் பேரில் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் பரணி முன்னிலையில் வெள்ளிக்கிழமை கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பாக மாணவ, மாணவிகள் சிலம்பம் விளையாட்டு, வாள் சண்டை, கராத்தே, களரி விளையாட்டு உள்ளிட்ட சாகச விளையாட்டுகளை செய்து வாக்களிப்பதன் முக்கியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தொடா்ந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு பதாகையில் பொதுமக்கள், வாக்காளா்கள் வண்ண கலா் பொடியில் தங்களது விரல்களை பதிந்து பதாகையில் வைத்து விழிப்புணா்வு செய்தனா்.

இந்த நிகழ்ச்சியில் கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் வனிதா, தோ்தல் துணை வட்டாட்சியா் புவனேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் சந்தோஷ்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் முரளி, கருப்பையன், குமாா், அன்பரசன் உள்ளிட்ட வருவாய்துறையினா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளையும் தோ்தல் விளம்பர பொறுப்பளா் செல்வசத்தியா செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.