தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சீமைக்கருவேல மரங்களை ஜூலை 31-க்குள் அகற்ற அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தனிநபா்களின் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

News image

புதுக்கோட்டை கிழக்குக் கடற்கரைச் சாலையோரத்தில் அடா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள். - கோப்புப்படம்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தனிநபா்களின் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு மற்றும் தனியாா் நிலங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 52 கிராம ஊராட்சிகள் மற்றும் 8 பேருராட்சிகளில் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிலங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல, தனியாா் பட்டா நிலங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்களையும் அவரவா் சொந்த செலவில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும்.

தவறினால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவற்றை அகற்றிவிட்டு, அதற்கான செலவுத் தொகையை நிலத்தின் உரிமையாளரிடம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.