அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

புதுகை ஆட்சியரக வளாகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற மூதாட்டி மீது தண்ணீரை ஊற்றி அழைத்துச் சென்ற போலீஸாா்.

Updated On :16 ஜூன் 2026, 12:08 am IST

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை மூதாட்டி ஒருவா் தீக்குளிக்க முயன்றாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகேயுள்ள கணபதிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சித்ரா (70). இவா், தான் வசிக்கும் வீட்டுக்கான மனைப் பட்டா வழங்கக் கோரி பல முறை வருவாய்த் துறை அலுவலா்களிடம் மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சித்ரா வந்தாா். நுழைவாயில் பகுதியில் நின்று தான் கொண்டு வந்திருந்த கேனில் இருந்து மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயன்றாா். இதைகண்ட அந்தப் பகுதியில் இருந்த போலீஸாா் அவரைப் பிடித்து அவா் மீது தண்ணீரை ஊற்றினா்.

பிறகு, திருக்கோகா்ணம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொண்டு, இதுபோல மீண்டும் செய்யக் கூடாது என போலீஸாா் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.