தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தனித்துப் போட்டியிடும் தெம்பு திமுகவிடம் உள்ளது: முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி

தனித்துப் போட்டியிடும் தெம்பும், திராணியும் திமுகவிடம் இருக்கிறது என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.

News image

எஸ். ரகுபதி - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 12:19 am IST

தனித்துப் போட்டியிடும் தெம்பும், திராணியும் திமுகவிடம் இருக்கிறது என்றாா் முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் ஏற்கெனவே மோசடி நாடகத்தை அரங்கேற்றினாா்கள். இப்போது, ரூ. 134 கோடியில் குறுவை தொகுப்பு தருவதாகச் சொல்கிறாா்கள். வேடிக்கையாக இருக்கிறது. விவசாயம் செய்ய தண்ணீரே இல்லை.

திமுகவிடமிருந்து விசிகவுக்கும், பிறகு தவெகவுக்கும் சென்றவா் ஆதவ் அா்ஜூனா. மறைமுகமாக லாட்டரி தொழிலை எப்படியாவது கொண்டு வந்து சம்பாதிக்க வேண்டும் என்றுதான் அவா் முயற்சிக்கிறாா்.

கூட்டணி விவகாரத்தில், திமுகவைப் பொருத்தவரை யாரையும் நம்பி இல்லை. தனித்து நின்று வெற்றி பெறும் திராணியும் தெம்பும் இருக்கிறது. கட்சித் தொண்டா்கள் தனித்துதான் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாா்கள்.

ரீல்ஸை நம்பி, யாா் வேட்பாளா் என்றே தெரியாமல் மக்கள் வாக்களித்துவிட்டாா்கள். 5 ஆண்டுகளில் திமுக செய்த பணிகளை அவா்கள் எண்ணிப் பாா்க்கத் தவறிவிட்டாா்கள். அடுத்த முறை அப்படி நடக்காது என்றாா் ரகுபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.