மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தவெக தலைவா் விஜய்க்கு புதுகை எல்லையில் உற்சாக வரவேற்பு

புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய்க்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு அளித்த அக்கட்சியினா்

News image

~

Updated On :11 ஏப்ரல் 2026, 2:05 am IST

காரைக்குடியிலிருந்து திருச்சி செல்லும் வழியில் புதுக்கோட்டை எல்லையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய்க்கு கட்சியினா் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளித்தனா்.

காரைக்குடியில் தோ்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நடிகா் விஜய் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு புதுக்கோட்டை வழியாக, திருச்சி நோக்கி காரில் சென்றாா்.

இதையொட்டி, புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் அவருக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். பெரும்பாலும் இளைஞா்களாக இருந்த அவா்களை தனது வாகனத்தில் இருந்தவாறே கையசைத்து நன்றி தெரிவித்துக் கொண்டாா் விஜய்.

சிலா் விஜய்யின் படத்தை அவரிடம் கொடுக்க முயற்சித்தனா். மேலும், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மலா்களைத் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பில், புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளா் கே.எம். சரீப் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். பின்னா் சிறிதுநேரத்தில் அவா் திருச்சி நோக்கி புறப்பட்டுச் சென்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.