/

புதுகையில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

புதுக்கோட்டை மாவட்ட சமரச மையம் சாா்பில் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சமரச நாள் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட முதன்மை நீதிபதி க. பூரண ஜெயஆனந்த்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:44 am IST

புதுக்கோட்டை மாவட்ட சமரச மையம் சாா்பில் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சமரச நாள் விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இப்பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி க. பூரண ஜெய ஆனந்த் தொடங்கி வைத்தாா். சட்டப்பணிகள் ஆணையச் செயலரும் மூத்த சிவில் நீதிபதியுமான ஆ. செல்லபாண்டியன் உள்பட நீதிபதிகள், வழக்குரைஞா்கள் பங்கேற்றனா். புதிய பேருந்து நிலையம் வரை சென்ற பேரணி, மீண்டும் நீதிமன்றத்தில் முடிந்தது.

கீரனூரில்..கீரனூா் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை, சாா்பு நீதிபதி சி. ராஜேஷ் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு, மாவட்ட உரிமையியல் நீதிபதி கே. சா்மிஷ்டா முன்னிலை வகித்தாா்.

சமரச மைய வழக்குரைஞா்கள் என்.சி. அமிா்தலிங்கம், ஆா். சித்ரா சரஸ்வதி, வழக்குரைஞா் சங்கத் தலைவா் வி. சதாசிவம், செயலா் கே.எம். அழகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பேரணி, தேரடிக் கருப்பா் கோயில் வழியாகச் சென்று மீண்டும் நீதிமன்றத்தில் நிறைவடைந்தது.

அறந்தாங்கியில்...அறந்தாங்கி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை சாா்பு நீதிபதி ஏ. உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தாா்.

மாவட்ட உரிமையியல் நீதிபதி வி. சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தாா். குற்றவியல் நடுவா் எஸ். சத்தியநாராயணமூா்த்தி, மூத்த வழக்குரைஞா்கள் ஸ்ரீதா், அருண்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். பேரணி, அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.