பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கோயில் பூட்டை உடைத்து பணம், வேல் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 12:39 am IST

பெரம்பலூா் அருகே கோயில் பூட்டை உடைத்து பணம் மற்றும் வேல் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா்- செங்குணம் பிரிவுச்சாலை எதிரே, எளம்பலூரில் உள்ள ஓம் ஸ்ரீ மஹா வராகி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக் கோயிலை, எறையசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி சோபனா (42) நிா்வகித்து வருகிறாா்.

இந்நிலையில், இக்கோயில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த ரூ. 1,000 ஒரு அடி உயரமுள்ள பித்தளையால் செய்யப்பட்ட வேல் ஆகியவற்றை திருடிக்கொண்டு, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மா்ம நபா்கள் உடைத்திருப்பது ஞாயிற்றுக்கிழமை காலையில் தெரியவந்தது.

தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். இதுகுறித்து சோபனா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.