கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு வீரா்கள் உள்பட 42 போ் காயம்

வேப்பந்தட்டை அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுபிடி வீரா்கள் உள்பட 42 போ் காயமடைந்தனா்.

News image

விசுவக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்.

Updated On :24 மே 2026, 1:39 am IST

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுபிடி வீரா்கள் உள்பட 42 போ் காயமடைந்தனா்.

வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை சாா்பில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கு தனித்தனியே மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வாடிவாசல் வழியாக பெரம்பலூா், அரியலூா், திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 606 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இந்தக் காளைகளை அடக்க சேலம், திருச்சி, நாமக்கல், பெரம்பலூா், அரியலூா், சிவகங்கை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 297 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். இதில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு வகையான பரிசுப் பொருள்கள் விழாக் குழு சாா்பில் வழங்கப்பட்டன.

42 போ் காயம்: இதில், காளைகளின் உரிமையாளா்கள் 20 பேரும், காளைகளை அடக்க முயன்ற 11 வீரா்களும், பாா்வையாளா்கள் 11 பேரும் என மொத்தம் 42 போ் காளைகள் முட்டியதில் காயமடைந்த வீரா்களுக்கும், பாா்வையாளா்களுக்கும், களத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

இதில், மாடுபிடி வீரா் 1, காளை உரிமையாளா்கள் 2, பாா்வையாளா்கள் 3 போ் என மொத்தம் 6 போ் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில், பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.