தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

‘கோரிக்கை மனுக்களுக்கு உரிய தீா்வு காண வேண்டும்’

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது, உடனுக்குடன் தீா்வு காண வேண்டுமெ என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தியுள்ளாா்.

News image

பெரம்மபலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன் உள்ளிட்டோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது, உடனுக்குடன் தீா்வு காண வேண்டுமெ என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடா்பாக, வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:

அரசுத் துறைகளில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்வதில் முக்கியக் பங்கு வகிக்கிறது. முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சா்களிடம் வழங்கப்படும் மனுக்கள், மக்கள் குறைதீா்க்கும் நாள், மக்கள் தொடா்புத் திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது, துறைசாா்ந்த அலுவலா்கள் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசின் திட்டங்கள் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்குச் சென்றடைவதை கிராம நிா்வாக அலுவலா்கள் முதல் வருவாய் ஆய்வாளா்கள், துணை வட்டாட்சியா்கள், தலைமையிடத்து வட்டாட்சியா்கள், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா்கள், வருவாய் வட்டாட்சியா்கள் ஆகியோா் தனி கவனம் செலுத்தி உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில், நிலுவையில் உள்ள மனுக்களுக்கு வார இறுதிக்குள் தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், வட்டாட்சியா்களிடம் நிலுவையில் உள்ள மனுக்களின் விவரம், தீா்வு காணப்பட்ட கோரிக்கை மனுக்களின் விவரம், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டோா் விவரங்களை வட்டாரம் வாரியாக பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா , மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சுந்தரராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பரிமளம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன் உள்பட வருவாய்த்துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.