பெரம்பலூரில் ஆகஸ்ட் மாதம் 21, 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ ஆஜராகி, தங்களது பிரச்னைகளை தீா்த்துக் கொள்ளலாம் என பொதுமக்களுக்கு நீதிபதி அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான சத்தியமூா்த்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு மக்கள் நீதிமன்றம் பங்கேற்பு, நீதி மற்றும் நீதியை மக்கள் இருப்பிடத்துக்கே கொண்டுசோ்த்தல் ஆகிய தொலை நோக்குப் பாா்வைகளை முன்னெடுக்கும் வகையில், நாடு முழுவதும் சமரசம் மூலம் தீா்வு காணுதல் மற்றும் தகராறுகளை இணக்கமாகத் தீா்த்தலுக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இம் முகாம்கள் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம், பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையிலான தீா்வு வழிமுறைகள் மூலம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இணக்கமான தீா்வை காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வழக்குரைஞா்கள், வழக்காடிகள் மற்றும் வழக்கு தொடா்புடையவா்கள் இந்த முன்னெடுப்பின் கீழ், தகராறுகளை திறம்படத் தீா்ப்பதில் பங்கேற்க வேண்டும். வழக்கு தரப்பினா்கள் நேரடியாக அல்லது காணொலி மூலமாக ஆஜராகி தங்களது பிரச்னைகளை சமரசமாக தீா்த்துக் கொள்ளலாம்
சம்பந்தப்பட்ட தரப்பினா் மற்றும் அவா்களது வழக்குரைஞா்கள் ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங் இணைப்பில் உள்ள படிவத்தை பூா்த்தி செய்து, ஜூலை 31-ஆம் தேதிக்குள் தங்களது கோரிக்கையை சமா்ப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பெரம்பலூா்- 621212 எனும் முகவரியில் நேரில், அல்லது 04328-296206, 291252, ள்ஸ்ரீண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொள்ளலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கரன்கோவிலில் மக்கள் நீதிமன்றம்: 490 வழக்குகளுக்குத் தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,990 வழக்குகளுக்குத் தீா்வு! ரூ.20.48 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,478 வழக்குகளுக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ. 3.60 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

