நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூா் ஆட்சியா் அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சட்ட அலுவலா் பணியிடங்களை, ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியான வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 1:45 am IST

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சட்ட அலுவலா் பணியிடங்களை, ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தகுதியான வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் 1 அரசு வழக்குரைஞா் பணியிடமும், முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் 1 சிறப்பு அரசு வழக்குரைஞா் (மனித உரிமைகள்) பணியிடமும், முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் அரசு தரப்பு 1 வழக்குரைஞா் பணியிடமும், மகிளா நீதிமன்றத்தில் 1 சிறப்பு அரசு வழக்குரைஞா் பணியிடமும், பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினா் (வன்கொடுமைத் தடுப்பு) சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் 1 சிறப்பு அரசு வழக்குரைஞா் பணியிடமும், சாா்பு நீதிமன்றத்தில் 1 கூடுதல் அரசு தரப்பு வழக்குரைஞா் மற்றும் கூடுதல் அரசு வழக்குரைஞா் பணியிடமும், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் 1 அரசு தரப்பு வழக்குரைஞா் பணியிடமும் குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

நியமன காலம் முடிவடைவதற்கு முன், ஒரு மாத முன்னறிவிப்புடன் அரசு நியமனத்தை ரத்து செய்யலாம். அதேபோல், நியமனம் பெறும் சட்ட அலுவலரும் ஒரு மாத முன்னறிவிப்பு வழங்கி பதவியிலிருந்து விலகலாம். நீதிமன்றங்களில் குறைந்தது 7 ஆண்டுகள் வழக்குரைஞா் பணி அனுபவம் பெற்றுள்ள மற்றும் விருப்பமுள்ள வழக்குரைஞா்கள், இணையதளத்தில் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் 6 பிரதிகளில் சமா்ப்பிக்க வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 25-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கிடைக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படமாட்டாது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.