கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கரூா் முனியப்பன் கோயில் அருகே ரவுண்டானா அமைக்க வலியுறுத்தல்

News image

கோப்புப்படம்

Updated On :15 மே 2026, 5:26 am IST

மாநகரில் விபத்துகளைக் குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் கரூா் முனியப்பன் கோயில் அருகே ரவுண்டானா அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய மண்டல காவல்துறைத் தலைவா், துணைத் தலைவா், கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு, கரூா் தமிழ் சங்கச் செயலரும், வழக்குரைஞருமான இரா. இராஜேந்திரன் அனுப்பிய கடிதம்:

கரூா் நகருக்கு சற்று மேற்கே கோவை சாலையும், ஈரோடு சாலையும் பிரியும் இடத்தில் உள்ள முனியப்பன் கோயில் பகுதி அருகே அடிக்கடி விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே, இந்த இடத்தில் போக்குவரத்துக் காவலரை நியமிக்க வேண்டும். மேலும் கோயில் அருகே ரவுண்டானாவும் அமைக்க வேண்டும். பொதுமக்களின் அவதியை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இதேபோல, கரூா் திண்ணப்பா தியேட்டா் அருகில், சா்ச் காா்னா், ஐந்து ரோடு அருகில், திருச்சி சாலையில் தெரசா பள்ளிக்கு மேல்புறம் ஆகிய இடங்களில் போக்குவரத்துக் காவலா்களும், சிக்னல்களும் இல்லாமல் இருப்பது விபத்துக்கு வாய்ப்பாக உள்ளது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமப்படுகின்றனா்.

தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால், காவல்துறை நிா்வாகத்தை சீரமைப்பதில் உரிய கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கரூா் மாநகரில் உள்ள சிக்கல்களை அறிந்து போக்குவரத்துக் காவல் துறையினரும், சட்டம்- ஒழுங்கு காவல் துறையினருக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வழங்கி முதல்கட்டமாக மாநகரில் விபத்துகளைக் குறைத்து, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.