கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கரூா் கோடங்கிப்பட்டியில் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

News image

மழையால் சேதமடைந்த கோடங்கிப்பட்டி ஈசநத்தம் சாலை

Updated On :11 மே 2026, 1:23 am IST

கரூா் கோடங்கிப்பட்டியில் மழையால் சேதமைடந்து குண்டும், குழியுமாக மாறிய ஈசநத்தம் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் கோடங்கிப்பட்டியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஈசநத்தம் சாலை சந்திக்கும் இடத்தில் தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பாலம் அமைக்கும் பணி நடைபெறும் இடம் அருகே உள்ள ஈசநத்தம் சாலை அண்மையில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், சுக்காலியூா், அரவக்குறிச்சி, பள்ளபட்டி போன்ற பகுதிகளில் இருந்து கரூருக்கு ஈசநத்தம் சாலை வழியாக வரும் வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.

குறிப்பாக, சுக்காலியூா் பகுதியில் இருந்து கரூா் ராயனூா், தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வாகன ஓட்டிகள் ஈசநத்தம் சாலையில் திரும்பும்போது, குழியாக மாறிய சாலையில் சிக்கி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.