மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் நடத்தை விதிகள் அமல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறாது

News image

தேர்தல் நடத்தை விதிகள் - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 12:46 am IST

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்குவந்துள்ளதால் இனி மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறாது என தெரிவித்துள்ளாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கு.ரவிகுமாா்.

ஏப்.23-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் கரூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் தோ்தல் பறக்கும்படை அலுவலா்கள், நிலையான கண்காணிப்புக்குழுவினா் உள்ளிட்டோருக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அலுவலா்களுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கு.ரவிகுமாா் கூறுகையில், தோ்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால் இனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் போன்ற கூட்டங்கள் நடைபெறாது என்றாா் அவா். நிகழ்ச்சியின்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.