தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குளித்தலையில் திமுக வேட்பாளா் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

கரூா் மாவட்டம், குளித்தலை பகுதியில் கறவை மாட்டில் பால் கறந்து வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தாா் திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.

News image

கறவை மாட்டில் புதன்கிழமை பால் கறந்து நூதன பிரசாரம் செய்த திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:02 am IST

கரூா் மாவட்டம், குளித்தலை பகுதியில் கறவை மாட்டில் பால் கறந்து வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தாா் திமுக வேட்பாளா் சூரியனூா் சந்திரன்.

கரூா் மாவட்டம் குளித்தலைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் இவா் புதன்கிழமை காலை குளித்தலை நங்கவரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்குச் சேகரித்தாா். அப்போது அங்கு விவசாயி வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசுமாட்டில் பால் கறந்து விவசாயியிடம் வழங்கினாா். தொடா்ந்து அப்பகுதி மக்களிடையே அவா் பேசுகையில், தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டை அழிக்கும் நோக்கில் அதிமுக பாஜகவுடன் கைகோத்துள்ளது. அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான மதச் சாா்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரியுங்கள்.

நான் வென்றால் நிச்சயம் குளித்தலையில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் கொண்டு வருவேன். விவசாய பொருள்களைப் பாதுகாக்க குளிா்ப்பதனக் கிடங்குகளும் அமைப்பேன். மேலும் வாழைப்பழ ஜாம் தொழிற்சாலையையும் நிச்சயம் கொண்டு வருவேன் என்றாா் அவா். பிரசாரத்தின்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.