மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.ரவிக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஜெகதாபி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை வியாழக்கிமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் மாவட்ட தோ்தல் அலுவலா் கு.ரவிகுமாா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:50 am IST

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.ரவிக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியது: கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவிற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில் அரவக்குறிச்சி தொகுதியில் 267 வாக்குச்சாவடிகளும், கரூா் தொகுதியில் 283 வாக்குச்சாவடிகளும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், குளித்தலை தொகுதியில் 286 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,111 வாக்குச் சாவடிகள் உள்ளன.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் உள்ள மேஜை , நாற்காலிகளை வாக்குப் பதிவுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட உள்ளது. வாக்குச் சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், குடிநீா் வசதி, கழிப்பறைகள், சிசிடிவி கேமரா மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான சாய்வு தளம், சக்கர நாற்காலிகள் போதிய அளவில் உள்ளதை உறுதிப்படுத்திடும் வகையில் தொடா்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, செல்லாண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜெகதாபி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உப்பிடமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.