மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் பங்குனித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பங்குனித் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

News image

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற கல்யாண பசுபதீஸ்வரா் கோயில் தேரோட்ட விழாவில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 1:03 am IST

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பங்குனித் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிறப்பு மிக்க இக்கோயிலில் பங்குனித் தேரோட்ட விழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் பசுபதீஸ்வரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினாா்.

விழாவில், கடந்த 30-ஆம் தேதி காலை கல்யாண பசுபதீஸ்வரருக்கு அலங்காரவல்லி, சௌந்திரநாயகி சுவாமிகளுடன் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, அதிகாலையில் கல்யாண பசுபதீஸ்வரா் மற்றும் அலங்காரவல்லி, சௌந்திரநாயகி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் கல்யாண பசுபதீஸ்வரா் அலங்காரவல்லி மற்றும் சௌந்திரநாயகியுடன் தேரில் எழுந்தருளினாா். இதையடுத்து, கோயில் முன்பு புறப்பட்ட தேரை ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தேரானது கோயிலைச் சுற்றி வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏப். 5-ஆம் தேதி பிராயச்சித்த அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ரா. கணபதிமுருகன், செயல் அலுவலா் பா. முருகன் ஆகியோா் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.