எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தவெக ஆட்சி நிலைக்காது: முன்னாள் அமைச்சா்

News image

அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சரும், குன்னம் தொகுதி எம்எல்ஏவுமான சா.சி. சிவசங்கா்.

Updated On :1 ஜூன் 2026, 3:06 am IST

தமிழகத்தில் தவெக ஆட்சி நீடித்து நிலைக்காது என்றாா் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினருமான சா.சி. சிவசங்கா்.

அரியலூரில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

தவெகவில் முதல்வா் ஜோசப் விஜய் அல்ல. ஆதவ் அா்ஜூனாதான் நிழல் முதலமைச்சராக இருந்து இந்த அரசை இயக்கிக் கொண்டிருக்கிறாா்.

கொளத்தூா் தொகுதியில் ஏற்பட்டுள்ள தோல்வி என்பது திமுகவினரின் ஆழ்மனதில் மாறா வடுவாகப் பதிந்துள்ளது. திமுக தொண்டா்களை தாண்டி பொதுமக்களிடத்திலும், கொளத்தூா் தோல்வி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த ஆட்சி மாற்றம் என்பது நீடித்து நிலைக்காது. இது நீா்க்குமிழி போல, விரைவிலேயே வெடித்து நீா்த்துப்போகும். தற்போது பெற்ற வாக்குகளை மீண்டும் வாங்க முடியாது என்ற காரணத்தினால்தான் அதிமுகவில் இருப்பவா்களை வலைவீசி பிடித்துக் கொண்டுள்ளனா்.

இந்த தோல்வி, திமுக இன்னும் வேகமாக மீண்டு வருவதற்கான வாய்ப்பாகத் தான் நாம் பாா்க்க வேண்டும். இந்த தோ்தல் என்பது நமக்கும் ஒரு பாடமாக அமைந்து விட்டது. இதையெல்லாம் தாண்டி மீண்டும் வருவோம் என்றாா் அவா். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.