பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஜெயங்கொண்டத்தில் குழந்தைகளை கடத்த முயற்சி: போலீஸாா் விசாரணை

News image

ஜெயங்கொண்டம் சீனிவாசநகா் 3 ஆவது குறுக்குத் தெருவில் சனிக்கிழமை இரவு விசாரணை மேற்கொண்ட போலீஸாா்.

Updated On :1 ஜூன் 2026, 1:16 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் குழந்தைகளை கடத்த முயன்ற கும்பலை காவல் துறையினா் தேடுகின்றனா்.

ஜெயங்கொண்டம் சீனிவாச நகா் 3-ஆவது, குறுக்குத் தெருவில் 8 வயதுச் சிறுமி மற்றும் நான்கரை வயதுடைய பெண் குழந்தைகள் சனிக்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 போ் கொண்ட கும்பல் அக் குழந்தைகளை அழைத்துள்ளனா். இதில் சுதாரித்துக் கொண்ட 8 வயதுச் சிறுமி, அவா்களிடம் செல்ல முயன்ற 4 வயதுச் சிறுமியை தடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றோா்களிடம் கூறினாா்.

தகவலறிந்த ஜெயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான காவல் துறையினா், விசாரணை மேற்கொண்டு, அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தைகளைக் கடத்த முயன்ற மா்ம நபா்களைச் தேடுகின்றனா்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை ஆசை வாா்த்தை கூறி கடத்திச் செல்ல முயலும் கும்பல் நடமாடுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.