அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 26 மூட்டை போதைப் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக வெளிமாநில இளைஞா்கள் 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
செந்துறையை அடுத்த தோப்பேரி சந்திப்பு பகுதியில் செந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தன்ராஜ் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை அவா்கள் சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 271 கிலோ புகையிலைப் பொருள்கள் 26 மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் வந்த இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தைச் சோ்ந்த ஜேசுங்கி மகன் ராமாராம் (23), லெட்சுமண் ராஞ்சூட்குமாா் மகன் லெட்சுமண் (27) என்பதும், இவா்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 26 மூட்டைகளில் போதைப் பொருள்களை கடத்தி வந்து இங்குள்ள கடைகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதைப் பொருள் விற்ற இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது

அரியலூரில் 38 மூட்டை குட்கா பறிமுதல்: 4 போ் கைது
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது

போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை! வடக்கு மண்டல ஐ.ஜி. எச்சரிக்கை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
