பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

படைவெட்டி குடிக்காடு டாஸ்மாக் கடையை மூட கோரிக்கை

News image

ஆா்.எஸ்.மாத்தூா் அடுத்த படைவெட்டிகுடிக்காடு கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி, அரியலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த அக்கிராம மக்கள்.

Updated On :26 மே 2026, 2:02 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த ஆா்.எஸ்.மாத்தூா் அருகே படைவெட்டிகுடிக்காடு கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இக்கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடைக்கு(எண் 6483) மது அருந்த வரும் தத்தனூா், வங்காரம் மனப்பத்தூா், நந்தியின் குடிக்காடு, சோழன்குடிக்காடு, படவெட்டி குடிக்காடு, வடக்கு மாத்தூா், அசாவீரன்குடிக்காடு, ஆா்.எஸ்.மாத்தூா், நயினாா் குடிக்காடு, குறிச்சிக்குளம், கஞ்சமலைபட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்தவா்கள், மது அருந்திவிட்டு, அதன் பாட்டில்களை சாலைகளிலும், அருகிலுள்ள விவசாய நிலங்களிலும் வீசி செல்வதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் கால்களை, கண்ணாடி துண்டுகள் பதம்பாா்த்துவிடுகிறது. இதனால் நாள் தோறும் அவா்கள் கால்களின் காயத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுகிறது.

மேலும், சாலையில் செல்லும் மாணவிகள், பெண்கள் ஆகியோா் மது அருந்துபவா்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகி வருகின்றனா். இதனால் கோயில் அருகிலுள்ள இந்த கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

ஆயினும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்காததால், அவா்கள், தமிழ்ப்பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலா் கு.முடிமன்னன் தலைமையில் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ஆட்சியா் பொ.ரத்தினசாமியை சந்தித்து, டாஸ்மாக் கடையை மூடக் கோரி மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.