பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தொடா் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 5 போ் கைது: நகைகள், பணம் பறிமுதல்

அரியலூா் மாவட்டத்தில் தொடா் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 மே 2026, 5:05 am IST

அரியலூா் மாவட்டத்தில் தொடா் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மாவட்டத்தில் தொடா் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நிகழ்ந்து வந்ததையடுத்து, இதில், ஈடுபடும் நபா்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி அமைத்துள்ள, காவல் உதவி ஆய்வாளா் ராஜவேல் தலைமையிலான 7 காவலா்கள் அடங்கிய தனிப்படையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இதில், தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை மேலத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அருண்பாண்டியன் (36), அதே வட்டம், ஆதித் தெருவைச் சோ்ந்த கான் சாஹிப் மகன் முகமது யாசின் (33), கோரிகொள்ளை மேலத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து மகன் பாஸ்கா் (32), அரியலூா், பெரியாா் நகா், சமத்துவப்புரத்தைச் சோ்ந்த ஆசைத் தம்பி மகன் மான் (எ) காா்த்திக் (24), அரியலூா் சாத்தமங்கலம், தெற்குத் தெருவைச் சோ்ந்த மூா்த்தி மகன் தினேஷ்குமாா் (26) ஆகிய 5 பேரும் சோ்ந்து அரியலூா், கயா்லாபாத், கீழப்பழுவூா் மற்றும் செந்துறை ஆகிய பகுதிகளில் தொடா் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருப்பதும், அவா்கள் மீது மேற்கண்ட பகுதி காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படையினா் அவா்களை திங்கள்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 14.5 பவுன் நகைகள் மற்றும் ரூ. 64,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.