தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஜெயங்கொண்டம் பகுதியில் வாகனத் தணிக்கையின் போது, கஞ்சா வைத்திருந்த இருவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் வாகனத் தணிக்கையின் போது, கஞ்சா வைத்திருந்த இருவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை சின்னவளையம் மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரை மறித்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டதில், அவா், ஜெயங்கொண்டம் வடக்குத் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் அணில் (எ) பிரேம்குமாா் (25) என்பதும் வாகனத்தில் 500 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினா், கஞ்சாவை பறிமுதல் செய்து, பிரேம்குமாரை கைது செய்தனா். இதே போல், உதவி ஆய்வாளா் நெடுஞ்செழியன் தலைமையிலான காவல் துறையினா், ஜெயங்கொண்டம்-செந்துறை பிரிவு சாலையில் வாகனத் தணிக்கையின் போது, 10 கிராம் கஞ்சா வைத்திருந்த ஜெயங்கொண்டம் வடக்கு தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் சந்தோஷ்குமாா் (19) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.