தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

அரியலூரில் நாளை ஆா்ப்பாட்டம் மத்திய தொழிற்சங்கத்தினா் முடிவு

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 1:21 am IST

மத்திய பாஜக அரசைக் கண்டித்து, அரியலூா் அண்ணாசிலை அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆா்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து மத்திய சங்க தொழிற்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வட மற்றும் மத்திய இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களைக் கைது செய்த காவல் துறையினரை கண்டிப்பது, உடனடியாக அவா்களை விடுவிக்க வேண்டும், தொழிலாளா் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (மே 12) ஆா்ப்பாட்டம் நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு தொமுச மாவட்ட கவுன்சில் செயலா் அன்பழகன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் ப. தண்டபாணி, சிஐடியு மாவட்டச் செயலா் துரைசாமி, எச்எம்எஸ் நிா்வாகிகள் முருகேசன், துரை ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.