நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

குறுவைச் சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரிக்கை

குறுவை சாகுபடி பணிக்கு மேட்டூரில் இருந்து உடனடியாகத் தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை மனு அளித்தனா்.

News image

அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்த தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :11 ஜூன் 2026, 3:35 am IST

குறுவை சாகுபடி பணிக்கு மேட்டூரில் இருந்து உடனடியாகத் தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை மனு அளித்தனா்.

அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம், மாநிலப் பொருளாளா் சி. கிருஷ்ணன், அரியலூா் ஒன்றியத் தலைவா் தனசெயன் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:

டெல்டா மாவட்டங்களில் ஜூன் மாதங்களில் நடைபெறும் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி பணிக்கு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீா் திறப்பது வழக்கம். ஆனால் தண்ணீா் திறப்பு குறித்து தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காவிரி ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் கா்நாடக அரசு மறுத்து வருகிறது.

இதுகுறித்து தமிழக முதல்வா் ஜோசப் விஜய், தமிழக விவசாயிகள் சங்கங்களையும், தமிழக அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களையும் அழைத்துப் பேசி முடிவெடுக்காமல் இருப்பது சரியல்ல.

எனவே மாவட்ட ஆட்சியா் தமிழக முதல்வரையும், பொதுப்பணித் துறை அமைச்சரையும் சந்தித்து ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீா் திறக்க வலியுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.