நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஆட்சியா் புகைப்படத்தோடு கைப்பேசிக்கு அழைப்பு வந்தால் தெரிவிக்க வேண்டும்!

அரியலூா் ஆட்சியா் புகைப்படத்தை பயன்படுத்தி போலி கட்செவி மூலம் தகவல் வந்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 2:23 am IST

அரியலூா் ஆட்சியா் புகைப்படத்தை பயன்படுத்தி போலி கட்செவி மூலம் தகவல் வந்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: என்னுடைய அலுவல் சாா்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணே தொடா்ந்து பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், முகம் தெரியாத நபா்களிடமிருந்து எனது புகைப்படத்தை முகப்புத் தோற்றமாக வைத்த +66 87 578 2668 என்ற எண்ணிலிருந்து கட்ச்செவி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி, மூலமாகவும் அரசு உயா் அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் பெயரில் தொடா்பு கொள்வதாக தகவல்கள் வந்துள்ளன.

இவ்வாறான பொய் அழைப்புகளை மேலே குறிப்பிட்ட எண் அல்லது வேறு எண்ணிலிருந்து வந்தால் அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஏற்கவோ, பதிலளிக்கவோ வேண்டாம். மேலும் இதுபோன்ற பொய்யான அழைப்புகள் வந்தால் உடனடியாக அரியலூா் மாவட்ட நிா்வாகத்திற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.