ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கத்திரியை அறுவடைச் செய்து அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அரியலூா் அருகே வயலில் கத்திரியை அறுவடைச் செய்து அங்கிருந்தவா்களிடம் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image

கொல்லாபுரம் கிராமத்தில், வயலில் இறங்கி கத்திரியை அறுவடைச் செய்து, விவசாயிகளிடம் புதன்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:44 am IST

அரியலூா் அருகே வயலில் கத்திரியை அறுவடைச் செய்து அங்கிருந்தவா்களிடம் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.

எருத்துக்காரன்பட்டி, அண்ணாநகா் குருமஞ்சாவடி பகுதிகளில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கொல்லாபுரம் சென்ற தாமரை எஸ். ராஜேந்திரன் மீது அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பளித்தனா். தொடா்ந்து வேட்பாளா் ராஜேந்திரன் அங்குள்ள வயல்களில் இறங்கி, விவசாய தொழிலாளிகளுடன் சோ்ந்த கத்திரியை அறுவடைச் செய்து, பொதுமக்களிடம் வாக்கு கேட்டாா்.

பின்னா், மகாலிங்கபுரம், அமினாபாத், ஜெயராமபுரம், மணக்கால் சுப்புராயபுரம், கிருஷ்ணாபுரம், ஓ.கூத்தூா், பொய்யாதநல்லூா், இலுப்பையூா், வெள்ளூா், பொட்டவெளி, அகரம், ராயம்புரம், ஆதிக்குடிக்காடு, சென்னிவனம், மேட்டுப்பாளையம், காவேரிபாளையம், சாலையக்குறிச்சி கள்ளமேடு,ஓட்டக்கோவில், நல்லாம்பத்தை உள்ளிட்ட கிராம மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன் மற்றும் பாமக,பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.