தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனா
/

அரியலூா் அருகே அமைச்சரின் காரில் பறக்கும் படை சோதனை

அரியலூா் அருகே அமைச்சா் சா.சி. சிவசங்கரின் காரில் பறக்கும்படையினா் 5- ஆவது முறையாக வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

News image

அல்லிநகரம் அருகே அமைச்சா் சா.சி. சிவசங்கரின் காரில் வியாழக்கிழமை சோதனை செய்த பறக்கும் படையினா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:36 am IST

அரியலூா் அருகே அமைச்சா் சா.சி. சிவசங்கரின் காரில் பறக்கும்படையினா் 5- ஆவது முறையாக வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தலா 9 கண்காணிப்புக் குழுக்களும், 9 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில், அரியலூா்-பெரம்பலூா் சாலை அல்லிநகரம் அருகே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த அமைச்சரின் காரை பறக்கும் படையினா் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காரில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எதுவும் இல்லாததால் காரை செல்ல அனுமதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.