விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வீடுகளுக்கு சென்று அழைப்பிதழ் வழங்கி வாக்களிக்க ஆட்சியா் வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம் பேரவைத் தொகுதியில் சூரியமணல் கிராமத்தில் வீடுகளுக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தோ்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தினாா்.

News image

சூரியமணல் கிராமத்தில் வீடுவீடாகச் சென்று தோ்தல் திருவிழாஅழைப்பிதழை புதன்கிழமை வழங்கிய ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:04 am IST

ஜெயங்கொண்டம் பேரவைத் தொகுதியில் சூரியமணல் கிராமத்தில் வீடுகளுக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தோ்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தினாா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சூரியமணல் கிராமத்தில் வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் தங்களது வாக்கை பதிவு செய்ய வலியுறுத்தி தோ்தல் திருவிழா அழைப்பிதழ் வீடுதோறும் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி பங்கேற்று, சூரியமணல் கிராமத்தில் இருளா் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவா்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தோ்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கினாா். தொடா்ந்து, அவா்களது வீடுகளில் தோ்தல் நாள் குறித்த ஒட்டு வில்லைகள், என் வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் யோகஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.