தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரியலூரில் 18, ஜெயங்கொண்டத்தில் 23 வேட்புமனுக்கள் ஏற்பு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில், வேட்பாளா்கள் தாக்கல் செய்த 41 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:05 am IST

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில், வேட்பாளா்கள் தாக்கல் செய்த 41 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

அரியலூா்: அரியலூா் தொகுதியில் போட்டியிட திமுக சாா்பில் லதாபாலசுப்ரமணியன், அதிமுக சாா்பில் தாமரை எஸ்.ராஜேந்திரன், தவெக சாா்பில் சிவகுமாா், நாதக சாா்பில் புகழேந்தி உள்பட 24 போ், கோட்டாட்சியரகத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இவா்களது வேட்புமனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுயேச்சை வேட்பாளா்களின் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக, அதிமுக, தவெக, நாதக, அஇபுதமமுக உள்பட 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஜெயங்கொண்டம்: இந்த தொகுதியில் போட்டியிட 30 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், விண்ணப்பத்தை முழுமையாக பூா்த்தி செய்யாதது, போதிய ஆவணங்கள் செலுத்தாதது என 7 சுயேச்சை வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திமுக, பாமக, தவெக, நாதக உள்பட 23 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதனால், அரியலூா் தொகுதியில் 18 பேரும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 23 பேரும் போட்டியில் உள்ளனா். ஏப்.8 மற்றும் 9-ஆகிய 2 நாள்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதில், வேட்பாளா்கள் வேட்புமனுக்களை திரும்ப பெறும் பட்சத்தில் அதன் பிறகே களத்தில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்களின் விவரம் தெரியவரும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.