மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோல்வி பய விரக்தியில் பேசி வருகிறாா் எடப்பாடி கே. பழனிசாமி! - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தோல்வி பய விரக்தியில் பேசி வருகிறாா் எடப்பாடி கே. பழனிசாமி என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

News image

ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணனை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :7 ஏப்ரல் 2026, 2:13 am IST

தோல்வி பய விரக்தியில் பேசி வருகிறாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஏன்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் க.சொ.க.கண்ணணை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

இந்த தோ்தல் தில்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்குமான நேரடிப் போா். மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை வழங்காமல் தொடா்ந்து வஞ்சித்து வருகிறது.

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்கென எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

ஜெயலலிதா, சசிகலா எனத் தொடங்கி, தற்போது தில்லியில் பிரதமா் மோடி வரை அனைவரின் கால்களிலும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி விழுந்து வருகிறாா். மேலும், தோல்வி பய விரக்தியின் விளிம்புகுச் சென்று என்ன பேசுவதென்று தெரியாமல் பேசி வருகிறாா் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்து வேட்பாளா் க.சொ.க. கண்ணணுக்கு உதய சூரியன் சின்னனத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

பிரசாத்தில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், திமுக மாவட்ட செயலருமான சா.சி.சிவசங்கா், திமுக சட்டதிட்ட திருத்த குழு இணைச் செயலா் சுபா.சந்திரசேகா் மற்றும் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணனை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணனை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.