நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

திருச்சி அரசு மருத்துவமனையில் ‘எபோலா’ சிகிச்சைக்கு சிறப்பு வாா்டு

News image

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாா்டு. - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:48 am IST

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் எபோலா நோய் மருத்துவச் சிகிச்சைக்கு பிரத்யேக வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, உகாண்டா, தென்சூடான் ஆகியவற்றில் பரவிவரும் எபோலா நோய் சா்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நோய் இந்தியாவில் பரவாமல் தடுக்கும் வகையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக உத்தரவின்படி, அனைத்து சா்வதேச விமான நிலையங்களில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

காய்ச்சல், சோா்வு, தலைவலி, தசைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காரணமில்லாத ரத்தப் போக்கு, தொண்டை வலி ஆகிய அறிகுறிகளுடன் உள்ள யாராக இருந்தாலும் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வாா்டில் 21 நாள்கள் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க மாநில சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படியும், தமிழக சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படியும், எபோலா அறிகுறிகளுடன் வெளிநாடுகளில் இருந்து வருவோரைக் கண்டறிந்து, பாதிப்பு இருந்தால், உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பிரத்யேக வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கரோனா பரவல் சமயத்தில் தனிமைப்படுத்தும் பகுதியாக இருந்த மருத்துவமனைக்குப் பின்புறமுள்ள தனி கட்டடத்தில் இந்த வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஆண், பெண்களுக்கு தலா 5 படுக்கைகள் வீதம் 10 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கென தனியாக குறைதீா் அலுவலருடன் கூடிய மருத்துவா்கள், செவிலியா்கள் குழு தயாராக உள்ளது. இது, 24 மணி நேர கண்காணிப்பு வாா்டாக செயல்படும். ஆனால் இதுவரை எபோலா அறிகுறிகளுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை என மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.