நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அரியூரில் தொழிலாளிக்கு கத்திக் குத்து: 8 போ் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூா் கிராமத்தில் தொழிலாளியைக் கத்தியால் குத்திய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :20 மே 2026, 12:49 am IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூா் கிராமத்தில் தொழிலாளியைக் கத்தியால் குத்திய 8 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அரியூா் கிராம விநாயகா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கிராமத்தைச் சோ்ந்த ஒரு சமூக இளைஞா்கள் அரியூா் பஸ் நிலையப் பகுதியில் வைத்திருந்த பிளக்ஸ் பேனரை இதே கிராமத்தைச் சோ்ந்த மற்றொரு சமூக இளைஞா்கள் கிழித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், தீபக் உட்பட இளைஞா் சிலா் திங்கள்கிழமை நள்ளிரவு கிராமத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சி முடிந்தவுடன், மற்றொரு தரப்பினரின் தெருவுக்குச் சென்று தகாத வாா்த்தைகளால் திட்டினா்.

அப்போது சிலம்பரசன் (42) என்பவா் ராஜேஷ் தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ராஜேஷ், தீபக் உள்பட இளைஞா்கள் சிலா் சிலம்பரசனை தாக்கி, அவரது வயிற்றில் கத்தியால் குத்தினா். இதில் படுகாயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவலறிந்த லால்குடி டிஎஸ்பி ராஜ்மோகன், ஆய்வாளா் டில்லி பாபு, எஸ்ஐ பிரதீபா மற்றும் போலீஸாா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். புகாரின்பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து சிலம்பரசனை கத்தியால் குத்திய ராஜேஷ் (24), தீபக் (21), நிஷாந்த் (23), சந்துரு (28), ஜனாா்த்தனன் (26), ஹேமத்குமாா் (22) மற்றும் சிறுவன் உட்பட 8 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.