மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாலையை கடக்க முயன்ற புதுகை இளைஞா் லாரி மோதி பலி

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 1:09 am IST

திருச்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒலியமங்கலத்தைச் சோ்ந்தவா் எஸ். வெள்ளைசாமி (34). இவா், திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் நாகமங்கலம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சாலையைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, தவறான திசையில் அதிவேகமாக வந்த லாரி சாலையோரத்தில் நின்றிருந்த வெள்ளைசாமி மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த வெள்ளைசாமியை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளைசாமி சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து லாரி ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டியைச் சோ்ந்த எஸ். ஜான்மாா்டின் (33) என்பவா் மீது மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.