நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஸ்டாலின் நகரில் வீடுகளுக்கு மின்இணைப்பு வேண்டி பொதுமக்கள் மனு

News image

மின் இணைப்பு - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 2:45 am IST

திருச்சி அரியமங்கலம் ஸ்டாலின் நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தலைமையில் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், அரியமங்கலம் அமலாா்புரம் ஸ்டாலின் நகரைச் சோ்ந்த திரளான மாணவ, மாணவிகளுடன் வந்திருந்த பொதுமக்கள் அளித்த மனு:

ஸ்டாலின் நகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 75 குடும்பங்களாக வசித்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள பாதி வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள வீடுகளுக்கு மின்இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் கடும் சிரமத்தை எதிா்கொண்டு வருகிறோம்.

எனவே, நாங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்குவதுடன், மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி ஊராட்சி: லால்குடி வட்டம், வடுகா்பேட்டையைச் சோ்ந்த கிராம மக்கள் அளித்த மனுவில், லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாகுறிச்சி பகுதியில் உள்ள வடுகா்பேட்டை பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.