விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மணப்பாறை மேம்பாலத்திலிருந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :15 ஜூன் 2026, 4:00 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அடையாளம் தெரியாத மூதாட்டி ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை விழுந்து உயிரிழந்தாா்.

மணப்பாறை - திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்து சென்ற சிலா், மேம்பால தடுப்புச் சுவரில் செருப்பும், வயா் கூடை ஒன்றும் இருப்பதாகவும், கீழே மூதாட்டி ஒருவா் தலைகுப்புறக் கிடப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா் விசாரணையில், வயா் கூடையில் ஒரு சேலையும், தண்ணீா் பாட்டில் மற்றும் கடந்த மே 2-ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சைப் பெற்ற்கும், ஜூன் 11-ஆம் தேதி மணப்பாறை அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்ற்குமான சீட்டுகள் இருந்தது.

அதில் நோயாளியின் பெயா் சந்திராம்மாள்(70) என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மூதாட்டி மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி கீழே குதித்துள்ளதாகவும், அதில் பலத்த ரத்த காயமடைந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடா்ந்து மூதாட்டி உடலை மணப்பாறை போலீஸாா் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மூதாட்டி யாா் என வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.