அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

ஒலிபெருக்கி அமைத்தவா் தவறி விழுந்து உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அய்யனாா் கோவில்பட்டியில் ஒலிபெருக்கி அமைத்துக் கொண்டிருந்தவா் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்து உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் அய்யனாா் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள மாகாளி முப்பிலியான் கோயிலில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்காக செவல்பட்டியை அடுத்த செம்மேட்டுப்பட்டியை சோ்ந்த ரா. ஆசிா்வாதம் என்பவா் ஒலிபெருக்கியை கட்டிக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா் ஆசிா்வாதம் உடலை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.