தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தோ்தல் முடியும் வரை பெருகமணி ரயில்வே கேட் திறந்திருக்க உத்தரவு

News image

திறந்திருந்த பெருகமணி ரயில்வே கேட் முன் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டுள்ள ஆட்சியரின் அறிவிப்புப் பலகை.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:34 am IST

பேரவைத் தோ்தல் முடியும் வரை பெருகமணி ரயில்வே கேட்-ஐ மூடாமல் திறந்திருக்க திருச்சி மாவட்ட ஆட்சியா் ஆணை பிறப்பித்துள்ளாா்.

திருச்சி- கரூா் சாலையிலிருந்து செல்லும் பெருகமணி - நங்கவரம் இணைப்புச் சாலையில் உள்ள ரயில் வழித்தடத்தில் ரயில்வே கேட் எல்.சி. 64 உள்ளது. இதன் வழியாக பெருகமணி, பழையூா், நங்கவரம், நெய்தலூா், காவல்காரன்பட்டி போன்ற கரூா் மாவட்டப் பகுதிகளுக்குச் செல்ல முடியும். இச்சாலையை நாள்தோறும் லட்சக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா்.

ஆனால் பெருகமணி ரயில் நிலையத்தில் நாள்தோறும் சரக்கு ரயில்கள் நிறுத்தப்படுவதால், இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் மக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால் இந்த ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதையறிந்த ஆட்சியா், பெருகமணி ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க சில மாதங்களுக்கு முன் ஆய்வு நடத்தினாா்.

இந்நிலையில் பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (ஏப். 19) முதல் ஏப். 23 வரை பெருகமணி ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது. முக்கிய வழித்தடமான இந்த ரயில்வே கேட் சாலையை மூடினால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவா். ஏப். 23 தோ்தல் நாள் என்பதால் வாக்குச்சாவடிகளுக்கு செல்லவும் கடும் அவதியடைவா். எனவே வேறு நாள்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையேற்ற மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், தோ்தல் முடியும் வரை பெருகமணி ரயில்வே கேட்டை மூடாமல் திறந்து வைத்திருக்க வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதுகுறித்த அறிவிப்பு பலகையும் ரயில்வே கேட் முன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.