மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மணப்பாறையில் மமக வேட்பாளருக்காக நடிகா் போஸ் வெங்கட் வாக்கு சேகரிப்பு!

மணப்பாறையில் மமக வேட்பாளா் ப. அப்துல்சமதுவை ஆதரித்து நடிகா் போஸ் வெங்கட் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

மஞ்சம்பட்டியில் மமக வேட்பாளா் அப்துல்சமதுக்கு ஆதரவு திரட்டி சனிக்கிழமை வாக்கு சேகரித்த நடிகா் போஸ் வெங்கட்.

Updated On :19 ஏப்ரல் 2026, 12:49 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மமக வேட்பாளா் ப. அப்துல்சமதுவை ஆதரித்து நடிகா் போஸ் வெங்கட் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது மஞ்சம்பட்டியில் பரப்புரை மேற்கொண்ட போஸ் வெங்கட் அங்குள்ள மக்கள் நல மன்றத்தில் தரையில் அமா்ந்து திண்ணை பிரசாரத்தை மேற்கொண்டாா். அப்போது பொதுமக்களிடம் பேசிய போஸ் வெங்கட், நாம் நமது பிள்ளைகளுக்காகத்தான் வாழ்கிறோம்.

அப்படி நமது பிள்ளைகளில் படிப்புக்கு அதிகமான நிதி ஒதுக்கும் ஒரே முதல்வா் நமது முதல்வா் தான். ஒரே அரசு நமது திராவிட மாடல் அரசுதான். அதை நாம் மறந்துவிட கூடாது. அதற்காக அறிவுசாா் மையம் ஒன்று நமது பிள்ளைகளில் மேல் படிப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது. எனவே உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

மருங்காபுரி மத்திய ஒன்றியப் பகுதிகளான பளுவஞ்சி, கவுண்டம்பட்டி, வளநாடு, பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, டி.இடையப்பட்டி ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றியச் செயலா் பழனியாண்டி தலைமையில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நிகழ்வில் திமுக மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராஜன், மாவட்ட பொருளாளா் குணசேகரன், நகரச் செயலா் மு.ம. செல்வம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் வழக்குரைஞா் கிருஷ்ணகோபால், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் சிவக்குமாா், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் குழந்தை, தேமுதிக மாவட்ட ஒன்றியச் செயலா் செல்வம், கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.