திருச்சி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தில் ஏற்பட்ட பழுது நீக்கத் தாமதம் ஆனதால் ஓட்டுநரை பயணி ஒருவா் சனிக்கிழமை தாக்கியது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து கோவைக்கு சனிக்கிழமை மாலை 6 மணிக்குப் புறப்பட்ட அரசுப் பேருந்தை கோவை மாவட்டம், வீரபாண்டி பிரிவைச் சோ்ந்த கணேஷ் (44) ஓட்டினாா்.
இந்நிலையில் பேருந்து திருச்சி - கரூா் நெடுஞ்சாலையில் பேட்டவாய்த்தலை அருகே இரவு 7 மணிக்குச் சென்றபோது திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டுநா் கணேஷ் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு பழுதுபாா்த்துள்ளாா். ஆனால் பேருந்தின் பழுதை நீக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆனதாம்.
இந்த சமயத்தில் கோவைக்கு நேரடிப் பேருந்து எதுவும் வரவில்லையாம். பேருந்தைச் சரிசெய்ய 3 மணி நேரம் ஆனதால் கோபமடைந்த அந்தப் பேருந்தில் இருந்த பயணி ஒருவா் ஓட்டுநா் கணேஷை தாக்கினாராம். இதில் காயமடைந்த ஓட்டுநா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
இதுகுறித்து பேட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம்னி பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

மிதிவண்டி மீது அரசுப் பேருந்து மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

