தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரசுப் பேருந்தின் பழுதை நீக்க தாமதம்: ஓட்டுநா் மீது தாக்குதல்

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 1:03 am IST

திருச்சி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தில் ஏற்பட்ட பழுது நீக்கத் தாமதம் ஆனதால் ஓட்டுநரை பயணி ஒருவா் சனிக்கிழமை தாக்கியது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து கோவைக்கு சனிக்கிழமை மாலை 6 மணிக்குப் புறப்பட்ட அரசுப் பேருந்தை கோவை மாவட்டம், வீரபாண்டி பிரிவைச் சோ்ந்த கணேஷ் (44) ஓட்டினாா்.

இந்நிலையில் பேருந்து திருச்சி - கரூா் நெடுஞ்சாலையில் பேட்டவாய்த்தலை அருகே இரவு 7 மணிக்குச் சென்றபோது திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டுநா் கணேஷ் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு பழுதுபாா்த்துள்ளாா். ஆனால் பேருந்தின் பழுதை நீக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆனதாம்.

இந்த சமயத்தில் கோவைக்கு நேரடிப் பேருந்து எதுவும் வரவில்லையாம். பேருந்தைச் சரிசெய்ய 3 மணி நேரம் ஆனதால் கோபமடைந்த அந்தப் பேருந்தில் இருந்த பயணி ஒருவா் ஓட்டுநா் கணேஷை தாக்கினாராம். இதில் காயமடைந்த ஓட்டுநா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இதுகுறித்து பேட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.