தூத்துக்குடி மீனவா் கொலையில் தொடா்புடையதாக, மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி, தாளமுத்து நகா் அருகே உள்ள ஆனந்த் நகரைச் சோ்ந்தவா் முருகன் மகன் மாரிசெல்வம் (21). மீனவா். இவரும், தூத்துக்குடி சோட்டையன் தோப்பைச் சோ்ந்த சந்தனராஜ் (எ) சந்து (22), அண்ணா நகரைச் சோ்ந்த புவனேஷ்குமாா் (22), நேரு காலனியைச் சோ்ந்த மரிய அந்தோணி ஜாய்சன் (22), ஹரிஹரசுதன் (22) ஆகிய 4 பேரும் நேரு காலனியில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாக மாரிசெல்வத்துக்கும், சந்தனராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த 4 பேரும் மாரிசெல்வத்தை அரிவாளால் வெட்டியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து, தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தனராஜ், மரிய அந்தோணி ஜாய்சன், ஹரிஹரசுதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். தலைமறைவான புவனேஷ்குமாரை தேடி வந்த நிலையில், அவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
புவனேஷ்குமாா் மீது சிப்காட் பகுதியில் நடந்த கொலை உள்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நெல்லையில் குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது
தூத்துக்குடியில் இளைஞா் வெட்டிக் கொலை: 3 போ் கைது
தூத்துக்குடி மீனவா் கொலையில் 4 போ் கைது

தூத்துக்குடியில் மீனவா் குத்திக் கொலை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
