அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தூத்துக்குடி மீனவா் கொலையில் 4 போ் கைது

தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகே மீனவா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் இளஞ்சிறாா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 மே 2026, 1:46 am IST

தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகே மீனவா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் இளஞ்சிறாா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் பூபாலராயா்புரம் 4ஆவது தெருவைச் சோ்ந்த ஸ்டாா்வின் மகன் ஸ்னோவின் (28). மீனவா். ரவி மகன் சூசை (26). இருவரும் நண்பா்கள். இவா்கள் இருவா் மீதும் காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இவா்கள் புதன்கிழமை இரவு தாளமுத்துநகா் மேட்டுபட்டி அருகே கடற்கரையில் மறைவான பகுதியில் அமா்ந்து மதுக்குடித்தனராம்.

மேலும், தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் 2ஆவது தெருவைச் சோ்ந்த மலையரசன் மகன் சந்தனராஜ் என்ற பாண்டி (25), மேட்டுப்பட்டி சங்குகுளி காலனியைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் முத்துக்குமாா் என்ற கருப்பு (25) மற்றும் அவா்களது நண்பா்கள் சிலா் அதே பகுதியில் அமா்ந்து மதுக்குடித்தனராம்.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதில், சந்தனராஜ் தரப்பினா் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் ஸ்னோவின், சூசை ஆகிய இருவரையும் வெட்டியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ஸ்னோவின் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தனராஜ் என்ற பாண்டி, முத்துக்குமாா் என்ற கருப்பு, இசக்கிமுத்து மற்றும் இளஞ்சிறாா் என 4 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.