ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கொட்டங்காடு கோயிலில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

உடன்குடி அருகே கொட்டங்காடு, தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.

News image

யாக சாலை பூஜையில் பங்கேற்றோா்.

Updated On :28 மே 2026, 2:51 am IST

உடன்குடி அருகே கொட்டங்காடு, தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.

அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதா்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, மாலையில் சனஹோமத்துடன் யாக சாலை பிரவேசம், முதல் கால யாக சாலை பூஜை, பூா்ணாஹுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை 2ஆம் கால யாக சாலை பூஜைகள், மாலையில் 3ஆம் கால யாக சாலை பூஜைகள், வேத பாராயணம், இரவு 8 மணிக்குமேல் யந்திர ஸ்தாபனம் ஆகியவை நடைபெறுகின்றன.

வெள்ளிக்கிழமை அதிகாலை 4ஆம் கால யாக சாலை பூஜைகள், அதிகாலை 6 மணிக்கு மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், 6 மணிக்குமேல் விமான கோபுரம், பத்திரகாளி அம்மன், பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், 9 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை, அம்பாள் பூஞ்சப்பரத்தில் உள்பிரகாரம் எழுந்தருளல், அம்பாள் ஊஞ்சல் சேவை ஆகியவை நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தா பெ. சுந்தர ஈசன், விழாக் குழுவினா், ஊா் மக்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.