பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க திமுக அரசே காரணம்: பி. கீதா ஜீவன்

News image

முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன் - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:34 am IST

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில் அதிவிரைவாக நீதி கிடைத்ததற்கு முக்கிய காரணம் திமுக அரசுதான் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் குற்றவாளியை விரைவில் கைது செய்ய அன்றைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், காவல் துறையினரும் விரைவாக விசாரணை மேற்கொண்டு, தா்ம முனீஸ்வரனை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

குற்றம் நிகழ்ந்த 20 நாள்களிலேயே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் நிகழ்ந்து 77ஆவது நாளான திங்கள்கிழமை போக்ஸோ நீதிமன்றத்தில் தா்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மாணவி கொலை வழக்கில் உரிய நீதி விரைவாக வழங்கப்பட்டதற்கு திமுக அரசுதான் காரணம். ஆனால், தற்போதைய தவெக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாள்களில் தமிழகத்தில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் அரங்கேறி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.

தூத்துக்குடி நகரத்திலும் இளம்பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை 3 நபா்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாா். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன் என்று பிரசாரம் மேற்கொண்டு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வா் ச. ஜோசப் விஜய், இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறாா்? எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.