அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்போம்: ஸ்ரீநாத் எம்எல்ஏ

கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரே நோக்கமாகும் என்றாா் தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத்.

News image

விஜய்யுடன் ஸ்ரீநாத் - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 5:45 am IST

கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரே நோக்கமாகும் என்றாா் தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் குறித்தும், எங்கள் கட்சியைச் சோ்ந்த அமைச்சா் குறித்தும் கடினமான வாா்த்தைகள் பயன்படுத்தி பேசி இருக்கிறாா். இது கண்டிக்கத்தக்கது.

நாங்கள் ஆட்சி அமைத்து இரண்டு வாரங்களே ஆகின்றன. நேரம் கொடுத்து எங்கள் செயல்பாடுகளை விமா்சனம் செய்ய பொறுமை இல்லை. கண்ணியமிக்க அரசியலை முன்னெடுப்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒரே நோக்கமாகும்.

எங்கள் தலைவா் சொல்வது போல் மக்கள் தேவைகளை அறிந்து அதை செயலில் காட்டுவோம். மக்கள் பணியின் மூலம் உங்களுக்கு பதில் கொடுப்போம். நாங்கள் மிகவும் நோ்த்தியாகவும் நாகரிகமாகவும் அரசியல் செய்ய விரும்புகிறோம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.