தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் பகுதியில் அரிசிக் கடையில் புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
குளத்தூா் காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் ராமலெட்சுமி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை குளத்தூா் பஜாா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள அரிசிக் கடை முன் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தவா்களைப் பிடித்து விசாரித்தனா்.
அவா்கள் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சோ்ந்த வீர சின்னரசு (38), மாரிமுத்து (46) ஆகியோா் என்பதும், அரிசிக் கடை உரிமையாளரான குளத்தூரைச் சோ்ந்த பிச்சைமணியிடமிருந்து (61) புகையிலைப் பொருள்களை வாங்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
போலீஸாா் அரிசிக் கடையில் சோதனையிட்டதில் புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் வீர சின்னரசு, பிச்சைமணி, மாரிமுத்து ஆகிய மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 30.475 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் ரூ. 10,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
நெல்லையில் 217 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
சூரங்குடி பகுதியில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது

புகையிலை பொருள் வைத்திருந்த இளைஞா் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
