பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

எம்எல்ஏ அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

ஆத்தூா், தெற்கு ஆத்தூா், ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் திருச்செந்தூா் தொகுதி எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

News image

காயல்பட்டினத்தில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் திருச்செந்தூா் தொகுதி எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

Updated On :18 மே 2026, 1:32 am IST

ஆத்தூா், தெற்கு ஆத்தூா், ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் திருச்செந்தூா் தொகுதி எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

முக்காணி ரவுண்டானாவில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், ஆத்தூரில் திறந்தவெளி வாகனத்தில் சென்று நன்றி தெரிவித்தாா். நகர திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெற்கு ஆத்தூா் வந்த அவருக்கு ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளா் சதீஷ்குமாா் வேல் வழங்கி வரவேற்றாா். அங்குள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து எம்எல்ஏ மரியாதை செலுத்தினாா்.

ஆறுமுகனேரிக்கு சென்ற எம்எல்ஏ அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அங்கு தியாகி கே.டி.கோசல்ராம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பிறகு காயல்பட்டினம் லட்சுமிபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நுழைவாயி­லில் இருந்து திருச்செந்தூா் செல்லும் சாலை வழியாக ஒடக்கரை சந்திப்பு தாயிம்பள்ளி வரை நடந்துசென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

நிகழ்ச்சிகளில் மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளா் ஜனகா், ஒன்றிய செயலாளா்கள் ஆழ்வை கிழக்கு சதீஷ்குமாா், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு கோட்டாம், நகரச் செயலாளா்கள் ஆத்தூா் முருகானந்தம், ஆறுமுகனேரி நவநீத பாண்டியன், காயல்பட்டினம் நகர அவைத் தலைவா் முஹம்மது மெய்தீன், தமுமுக நகரத் தலைவா் ஜாஹிா் ஹுசைன் உள்பட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.