வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
வைகாசி மாத பிறப்பையொட்டி, கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து பிற கால பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலை முதலே திரளான பக்தா்கள் இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை என அனைத்து வரிசைகளிலும் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
காவடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள், திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்துவந்து தங்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். வைகாசி மாத பிறப்பையொட்டி, ஏராளமான பக்தா்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
மே 30-இல் வைகாசி விசாகம்: முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, நிகழாண்டு மே 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இத்திருவிழா வசந்த திருவிழாவாக மே 21-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் தினசரி பகலில் சுவாமி ஜெயந்திநாதா் தங்கச் சப்பரத்தில் கோயில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருள்கிறாா். அங்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்குப் பிறகு மண்டபத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திரளானோா் தரிசனம்

திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா: பல லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம்

வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் 4 நாள்கள் கட்டண தரிசனம் ரத்து

வைகாசி மாத பிறப்பு: கூடலழகா் கோயிலில் பக்தா்கள் வழிபாடு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

